இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில், இந்த தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், இடைத்தேர்தல் வந்தால் அவர்கள் போட்டியிட தடை ஏதும் இல்லை என்றும் தீர்ர்ப்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளதாகத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. பெங்களூருவில் இருக்கும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி மற்றும் இராய்ச்சூரில் உள்ள மஸ்கி தொகுதி ஆகிய இரு தொகுதிகளைத் தவிர மீதமிருக்கும் 15 தொகுதிகளுக்கு கடந்த டிச.5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
பெரும்பான்மைக்கு 6 இடங்கள் தேவை என்ற நிலையில் 12 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது பாஜக. இதன்மூலம் கர்நாடகாவில் தன் ஆட்சிக்காலத்தை தக்கவைக்கிறது பாஜக என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய அரசாக பா.ஜ.க அமைய,