பெரும்பான்மைக்கு 6 இடங்கள் தேவை என்ற நிலையில் 12 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது பாஜக. இதன்மூலம் கர்நாடகாவில் தன் ஆட்சிக்காலத்தை தக்கவைக்கிறது பாஜக என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரு : கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் இன்று ( டிச.,9) வெளியாகின. வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. பெரும்பான்மையை நிரூபிக்க 6 இடங்கள் தேவை என்ற நிலையில், சுமார் 12 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் 2 இடங்களிலும்,மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
ஏன் இடைத்தேர்தல்?
கர்நாடகாவில் ம.ஜ.த. - காங்., கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஆட்சியை கலைக்க பா.ஜ.க. அரசு பல முயற்சிகளைச் செய்தது. இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேர் பதவி விலக முடிவெடுத்தனர். இந்த எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாநிலத்தை ஆளும் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.