தேர்தலை சந்திக்க ஸ்டாலின் பீதி.! திராணி இருந்தால் மோதி பார்க்கட்டும் - முதல்வர் பழனிசாமி

உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று விட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின் என முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 27,30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது.


ஆனால் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையரை பணிகள் நிறைவுறாமல் இருப்பதால் தேர்தல் நடத்த இயலாது என திமுக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தனர். இதற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வருகிறார். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார்.


Popular posts
கொலைநடுங்க வைக்கும் கொரோனா.... தாக்காமல் எஸ்கேப் ஆவது எப்படி
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்
Image
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 120-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோய்க்கு 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்